
'இருபதாம் தேதி இருநூறு ரூபிள் சம்பளமாக கிடைக்கும். அவருக்கும் டாக்டருடைய மனைவிக்கும், ஏதாவது காரணத்தை வைத்து, ஏதாவது கொடுக்க வேண்டும். பாதிரியாரை ஒரு பிரார்த்தனைக்கு அழைக்கலாம். நோய் இருப்பதாக காட்டிக் கொண்டு டாக்டரிடம் போகலாம். அவர்களுடைய மதிப்பு, காயப்பட்டு விடக் கூடாதல்லவா? பாதிரியார் ஆவ்ராமிக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும்...'
விரல்களை மடக்கி, என்னவோ கணக்குகளைப் போட்டுப் பார்த்த அவன், காரியதரிசிக்கும் வேலைக்காரர்களுக்கும் மாமிசம் தருபவனுக்கும் கொடுப்பதற்கே இருநூறு ரூபிள்கள் மிகவும் சிரமப்பட்டே சரியாக வரும் என்ற உண்மையை அதிர்ச்சியுடன் புரிந்து கொண்டான். சிந்தனைகள் கடந்த காலத்தை நோக்கி பயணித்தன. தன் தந்தையின் சொத்துக்கள் முழுவதையும் வீணடித்து வாழ்ந்திருந்த காலம்... விலைமாதர்களுக்கு விலை மதிப்புள்ள விசிறிகளையும், நடிகைகளுக்கு விலை அதிகான பொருட்களையும் கொடுத்திருந்த இருபத்து இரண்டு வயது கொண்டவனின் சபலங்கள் நிறைந்த காலம்... ஓட்டுநர் குஸ்மாவிற்கு தினமும் பத்து ரூபிள்கள் கொடுத்துக் கொண்டிருந்த காலம்... 'வெட்டி பந்தா' என்ற பெயரில் வீணாக்கிய அந்த ரூபிள்கள் இப்போது எந்த அளவிற்கு பயன்பட்டிருக்கும்!
'பாதிரியார் ஆவ்ராமி மூன்று ரூபிள்களை வைத்துக் கொண்டு ஒரு மாதம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு ரூபிளை வைத்து பாதிரியாரின் மனைவிக்கு ஒரு பாவாடை உண்டாக்கலாம். டாக்டரின் மனைவிக்கு துணிளைச் சலவை செய்வதற்கு ஒரு ஆளை வைக்கலாம். எப்படியாவது அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்...!'
திடீரென்று பிஷப்பிற்கு எழுதிய கடிதத்தைப் பற்றி நினைத்து, குனின் குளிர் காற்றில் சிக்கிக் கொண்டதைப் போல நடுங்கினான்.
பலமான சத்தியத்திற்கு முன்னால் நின்றபோது உண்டான அடங்காத வெட்கக் கேடு, அவனுக்குள் கீழ்ப்படியக் கூடிய சுமையை நிறைத்தது.
இப்படிப்பட்டதாக இருந்தது- நல்ல இதயத்தைக் கொண்டவனாக இருந்தாலும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதில் போதுமான சிந்தனை இல்லாமற் போன ஒருவனின் 'பயனுள்ள முயற்சி'களில், ஒன்றின் ஆரம்பமும் முடிவும்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook