Logo

முன்னேற உதவும் 365 பொன்மொழிகள்

Category: தத்துவம்
Published Date
Written by sura
Hits: 77471
munnera uthavum 365ponmozhigal

ஒரு சந்தோஷமான

வாழ்க்கை என்பது

மனதின்

அமைதித்தன்மையைப்

பொறுத்தது.

***

2

எவன் ஒருவன்

பொறுமைசாலியாக

இருக்கிறானோ, அவன்

தான் நினைத்ததை

கட்டாயம் அடைவான்.

***

3

கிரீடங்களை விட

கனிந்த இதயங்கள்

மேலானவை.

***

4

நீ உன்னுடைய

நண்பனுக்கு பணம் தந்து

உதவ முடியாமற் போகும்பட்சம்,

ஒரு ஆறுதல்

வார்த்தையைக் கூறி

அவனுக்கு உதவலாம்.

***

5

உனக்கு

நிழல் தரும்

மரத்திற்கு

மரியாதை கொடு.

***

6

கற்றுக் கொள்வதற்கு

விருப்பமில்லாமல்

இருப்பதை விட,

அறியாமை

கொண்டவனாக இருப்பது

வெட்கப் படக் கூடிய

செயல் அல்ல.

***

7

நம்மிடம் இருக்கும்

சந்தோஷத்தைப்

பிறருடன் பங்கிட்டுக்

கொள்ளும்போது,

அந்த சந்தோஷமே

இரண்டு மடங்குகளாக

பெருகுகிறது.

***

8

நாமும் வாழ்ந்து,

பிறரையும் வாழ

வைப்பதுதான்

பொதுவான சட்டத்தின்

அடிப்படை.

***

9

அறிவு என்பது

சிறகைப் போன்றது.

அந்த சிறகைக் கொண்டு

நாம் சொர்க்கத்திற்கே

பறந்து செல்லலாம்.

***

10

ஒருவன் என்றைக்கு

சிரிக்காமலே

இருக்கிறானோ,

அந்த நாள் தொலைந்து

போன நாளே.

***


11

எவன் ஏழைகளுக்கு

கடன் தருகிறானோ,

அவனுக்கு

கடவுளிடமிருந்து

வட்டி கிடைக்கும்.

***

12

வாழ்வின் ரகசியம் என்பது -

நீ என்ன நினைக்கிறாயோ,

அதை செய்யாமல்

இருப்பது அல்ல.

எதை செய்யப் போகிறாயோ,

அதை விரும்புவதுதான்.

***

13

அதிர்ஷ்டத்தின்

விளையாட்டுதான்

ஒரு மனிதனின்

வாழ்க்கை.

***

14

மனித வாழ்க்கை மீது

ஆண் கொள்ளும் விருப்பம்

ஒரு பகுதியாக இருக்கலாம்.

ஆனால்,  முழு இருத்தலுமே

பெண்ணுக்கு

அதில்தான் இருக்கிறது.

***

15

பழக்க, வழக்கங்களும்

சம்பிரதாயங்களும்

வேறுபடலாம்.

ஆனால்,  மனிதனின்

இயற்கை குணம் ஒன்றுதான்.

***

16

கடவுள்

எவற்றையெல்லாம்

ஒன்று சேர்த்து வைத்திருக்கிறாரோ,

அதை மனிதன்

பிரிக்காமல் இருக்க வேண்டும்.

***

17

ஒரு மனிதன்

ஒரு பெண்ணை காதலிக்க,

ஒரு பெண் ஒரு ஆணைக் காதலிக்க -

அப்போது சொர்க்கத்திலிருந்து

தேவதைகள் புறப்பட்டு வந்து

அவர்கள் இருக்கும் வீட்டில் அமர்ந்து,

அவர்களின் சந்தோஷத்திற்காக பாடுவார்கள்.

***

18

பிறரின் வீழ்ச்சியிலிருந்து,

நீ தவிர்க்க வேண்டிய

பாவங்கள் என்ன என்பதைக்

கற்றுக் கொள்.

***

19

இது காலி பர்ஸ்தான்.

ஏனென்றால்,

இது முழுக்க

மற்ற மனிதர்களின்

பணம்தான் இருக்கிறது.

***

20

கடவுள்

எல்லா இடங்களிலும்

இருக்க முடியாது.

அதனால்தான் அவர்

அன்னைமார்களைப் படைத்தார்.

***


21

யார் தங்களின் கருத்துக்களை

எந்த சமயத்திலும்

திருத்திக் கொள்ளாமல்

இருக்கிறார்களோ,

அவர்கள் உண்மையின் மீது

கொள்ளும் விருப்பத்தை விட,

தங்களின் மீது

வைத்திருக்கும் விருப்பம்

அதிகமானது.

***

22

நம்முடைய மிகப் பெரிய சந்தோஷம் -

வாய்ப்பு நம்மை எப்படிப்பட்ட

வாழ்க்கையை வாழ

செய்திருக்கிறது என்பதில் இல்லை.

அதற்கு மாறாக, நல்ல

மனச்சாட்சியின் விளைவு,

நல்ல உடல் நலம், தொழில்,

ஈடுபடும் எல்லா

முயற்சிகளிலும் இருக்கக் கூடிய

முழுமையான சுதந்திரம்...

இவற்றில்தான் இருக்கிறது.

***

23

மனித இனத்திற்கு

பயனுள்ளவனாக இரு.

அதன்மூலம்

மனித உயிர்களின் மீது

அன்பு செலுத்துவதைப் பற்றி

தெரிந்து கொள்வாய்.

***

24

செயல்படாமல் இருப்பது

சிறிய ஆசைகளைக்

குறைத்து,

பெரிய ஆசைகளை

அதிகரிக்கச் செய்யும்.

***

25

சிந்திக்க தெரியாதவர்களுக்கு

கேளிக்கைதான்

சந்தோஷத்தை

அளிக்கக் கூடிய விஷயம்.

***

26

பகுத்தறிவு வாதிகளுக்கும்

மூடத்தனங்களுக்குமிடையே

சாத்தான்

உலகைப் பிரித்து

வைத்திருக்கிறது.

***

27

ஒவ்வொரு பேரத்தையும்

தெளிவாகவும் வெளிப்படையாகவும்

செய்யுங்கள்.

அப்படியென்றால்தான்,

பின்னர் யாரும் குறை கூறாமல் இருப்பார்கள்.

***

28

ஒரு மனிதனின்

செழிப்பான வாழ்வின்

இறுதியில்தான்,

நாம்

அவன் சந்தோஷமாக

இருப்பதாக கூறுவோம்.

***

29

நாம் எவற்றையெல்லாம்

வெறுக்கிறோமோ,

அதற்குக் கீழே நம்மை

பலமான வெறுப்பு நசுங்கிக்

கிடக்கும்படி செய்து விடும்.

***

30

இயற்கை, நேரம், பொறுமை -

இவை மூன்றுதான்

மிகச் சிறந்த மருத்துவர்கள்.

***


31

எல்லா விஷயங்களிலும்

அழகு என்ற ஒன்று இருக்கிறது.

ஆனால், எல்லோருமே

அதை பார்ப்பதில்லை.

***

32

ஒரு கழுகு

ஒரு புறாவை

அழிப்பது, புகழுக்குரிய

விஷயமல்ல.

***

33

எவன் தன்னைத்தானே

மிகவும் பெரிதாக

நினைத்துக் கொண்டிருக்கிறானோ,

அவன் தாழ்த்தப்படக் கூடியவன்.

எவன் தன்னைத் தானே

அடக்கமாக நினைத்துக்

கொண்டிருக்கிறானோ,

அவன் உயர்த்தப்படக் கூடியவன்.

***

34

ஒரு காயத்தை

உண்டாக்குவதை விட,

அதை பெற்றுக் கொள்வது

நல்லது.

***

35

பீப்பாயை வைத்து

ஒயினைப் பற்றி

நீ முடிவு செய்து

விட முடியாது.

***

36

ஒருவன் கற்க வேண்டிய

விஷயங்களை ஒப்பிட்டுப்

பார்க்கும்போது, எந்த மனிதனும்

புத்திசாலி இல்லை.

***

37

ஒரு பவுண்ட்

சட்டத்திற்கு நிகரானது

ஒரு பென்னி எடையைக்

கொண்ட அன்பு.

***

38

யார் சுதந்திரத்தை

விரும்புகிறார்களோ,

அவர்களுக்குத்தான்

கடவுள் சுதந்திரத்தை

அளிக்கிறார்.

***

39

ஒரு நீண்ட வாழ்க்கை

சிறந்ததாக இல்லாமல்

இருக்கலாம். ஆனால்,

ஒரு சிறந்த வாழ்க்கை

நீண்டு நிற்கக் கூடியது.

***

40

வெறுப்பு இருக்கும் இடத்தில்

ஒரு எருமையைக்

கொன்று வைக்கப்படும்

விருந்தை விட,

அன்பு இருக்கும் இடத்தில்

காய்கறிளை வைத்து

நடத்தப்படும் விருந்து

உயர்வானது.

***


41

மனித இதயத்திலேயே

புனிதமான விஷயம்

உண்மையாக இருப்பதுதான்.

***

42

ஒரு மனிதன் எப்படி நடந்து

கொள்ள வேண்டுமோ,

அப்படி நடப்பவன்தான்

மனிதன்.

***

43

திருமணங்கள்

சொர்க்கத்தில்

நிச்சயிக்கப் படுகின்றன.

***

44

ஒரு வீட்டின்

தலைவர்தான்

தன்னுடைய வீட்டிற்கு

மரியாதையைக்

கொண்டு வர வேண்டும்.

வீடு, அதன்

உரிமையாளருக்கு அல்ல.

***

45

மனம்தான்

புனிதமானதாக

இருக்க வேண்டும்.

குருதி அல்ல.

***

46

ஒரு கஞ்சனிடம்

எது இல்லாமல் இருக்கிறதோ,

அதைவிட

எது அவனிடம் இருக்கிறதோ -

அதுவே அவனுக்கு

உதவப் போவது இல்லை.

***

47

தாங்கள் பார்த்திராத

ஒன்றின் மீது யார்

இன்னும் நம்பிக்கையுடன்

இருக்கிறார்களோ,

அவர்கள்

ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.

***

48

தன்னுடைய

குழந்தை அழும்போது,

ஒரு தாய் நடனத்திற்கான

இசையைக் கேட்க மாட்டாள்.

***

49

மிகவும் கொடூரம்

நிறைந்த அரக்கனின்

மனதில் அமைதியை

உண்டாக்கக் கூடிய

வசீகர தன்மைகள்

இசைக்கு இருக்கிறது.

***

50

எவன் ஆட்சி

செய்யப் படுவானோ,

அவனைத் தவிர

வேறு யாரும்

ஆட்சி செய்ய முடியாது.

***


51

கடவுள் தன்னுடைய

 சொர்க்கத்தில் இருக்கிறார்.

உலகில்

உள்ள அனைத்தும்

ஒழுங்காக இருக்கின்றன.

***

52

குழந்தையின் எதிர்கால விதி

எப்போதும்

ஒரு தாயின் செயலில்தான்

இருக்கிறது.

 ***

53

 சுதந்திரமாக

 ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்

 கடலை விட,

 சர்வாதிகாரத் தன்மையில்

 நிலவும்

அமைதியைத்தான்

 பிடிவாதக்கார மனிதர்கள்

 விரும்புவார்கள்.

 ***

54

வாழ்க்கைக்கு நாம்

ஒரு புதிய விதியை

உண்டாக்குவோம்.

எந்த அளவிற்கு தேவையோ,

அதைவிட சற்று

அதிகமான அன்புடன்

எப்போதும் இருப்பதே அது.

 ***

55

எந்தச் சந்தையிலும்,

நூறு முனகல்களுக்கு

நிகரானது ஒரு சிரிப்பு.

 ***

56

சந்தோஷத்திற்கான

எல்லா வாய்ப்புகளையும்

இயற்கை உருவாக்கித் தருகின்றது.

ஆனால், அதை எப்படி

பயன்படுத்திக் கொள்வது

என்ற விஷயம்

 அவர்களுக்கு தெரிய வேண்டும்.

***

57

ஒரு மனிதன்

எந்த அளவிற்கு

காயமுற்றானோ,

அந்த அளவிற்கு எளிதில்

அவன் குணமடைந்து விட

முடியாது.

 ***

58

எங்கு உங்களின்

பொக்கிஷம் இருக்கிறதோ,

அங்குதான் உங்களின்

இதயம் இருக்கும்.

 ***

59

எங்கோ தூரத்தில்

மாமிசத்தை வறுப்பதை விட,

வீட்டில் ரொட்டியை

காய வைப்பது மேலானது.

***

60

காலை உணவிற்கு

முந்தைய ஒரு மணி நேரம்,

எஞ்சிய நாளின்

இரண்டு மடங்கிற்கு நிகரானது.

 ***


61

அறிவே இல்லாத

ஒரு மனிதன்

இறந்து போன

மனிதனுக்கு ஒப்பானவன்.

***

62

இப்போதைய இனிய

சந்தோஷங்களை

கவலைகள்

நினைத்துப் பார்க்கும்.

 ***

63

உன்னுடைய

கஞ்சியை ஆற

வைப்பதற்கு

உன் மூச்சை வைத்திரு.

 ***

64

யார்

அறிவிற்காக தாகத்துடன்

இருக்கிறார்களோ,

அவர்களுக்கு அது கிடைக்கும்.

 ***

65

ஒரு மனிதன்

இதயத்தில் என்ன

எழுதப் பட்டிருக்கிறதோ,

அதைக் கொண்ட அவனுக்கான

சட்டம் பற்றிய நூல்

எங்கே இருக்கிறது?

 ***

66

ஏமாற்றுக்காரர்கள்

பிறரின் மீது ஆதிக்கம்

செலுத்துவதில் ஆரம்பித்து,

தங்களைத் தாங்களே

ஏமாற்றிக் கொள்வதில்

முடிக்கிறார்கள்.

 ***

67

நம் வாழ்வின்

வலையே

நல்லது, கெட்டது

எல்லாம் கலந்த

நூல்களால் ஆனதுதான்.

***

68

அன்பில்

பயம் என்பதே இல்லை.

ஆனால்,

உண்மையான அன்பு

பயத்தை

விரட்டியடித்து விடும்.

 ***

69

பெரும்பாலானவர்களின்

கருத்துதான், எது சரி

என்பதற்கான இறுதி முடிவு அல்ல.

 ***

70

ஒரு மனிதன்

தன்னைத் தானே

எந்த அளவிற்கு எடை போட்டு

வைத்திருக்கிறானோ,

அதற்கேற்றபடிதான்

அவன் மதிப்பிடப் படுகிறான்.

 ***


71

ஒவ்வொரு மனிதனும்

ஒரு முதலாளியும்,

ஒரு வேலைக்காரனும்....

இரண்டுமேதான்.

***

72

ஒரு கவலையில் இருக்கும் மனிதன்

எவ்வளவு நாட்கள் வாழ்கிறானோ,

அவ்வளவு நாட்கள்

ஒரு சந்தோஷத்தில் திளைக்கும்

மனிதனும் வாழ்கிறான்.

***

73

அவசரத்தால்தான்

தவறுகள் உண்டாகின்றன.

எதையும் நிதானமாக

செய்வதன் மூலம்

எந்த சமயத்திலும்

அது உண்டாவதில்லை.

***

74

பணம் தன்னுடைய

வேலைக்காரனாக

இல்லையென்றால்.

அது உன்னுடைய

முதலாளியாக இருக்கும்.

***

75

காதால் கேட்கும் பாடல்கள்

இனியனவாக இருக்கலாம்.

ஆனால்,

இன்னும் கேட்காமல் இருப்பவை,

கேட்ட பாடல்களை விட

மிகவும் இனிமையானவை.

***

76

பிறரை வேதனைப்பட

செய்யாதீர்கள்.

அதே போல

மற்றவர்களிடமிருந்து

வேதனைகளை

வாங்கவும் செய்யாதீர்கள்.

***

77

என்ன காரணத்திற்காக என்று

உனக்கு தெரியாமல் இருக்கும் பட்சம்,

நீ ஒரு மனிதனைப் பற்றி கேவலமாக

எந்த சமயத்திலும் பேசாதே.

அது ஒரு காரணத்திற்காகத்தான் என்று

உனக்கு தெரியும் பட்சம்,

உனக்குள் நீயே கேட்டுக் கொள்:

'நான் ஏன் இதை கூற வேண்டும்?'

***

78

நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில்

மிருகத்தனமாக நடந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.

ஒரு கெட்ட மனிதனுக்கும், ஒரு நல்ல மனிதனுக்குமிடையே

உள்ள வித்தியாசமே - அதை தேர்ந்தெடுப்பதற்கான

காரணத்தில்தான் இருக்கிறது.

***

79

இந்த வாழ்வின் பெரும்பாலான

நிழல்கள் நம்முடைய சொந்த சூரியோதயத்தில்

நிற்பதால் உண்டாகுபவைதான்.

***

80

ஒரு சிங்கத்தின் கர்ஜனையை விட

ஒரு அழகான பெண்ணின் முனகள்

சத்தம் நீண்ட தூரம் கேட்கும்.

***


81

மேல் நாட்டு தத்துவ ஞானிகள் கூறுவார்கள்:

'நான் எதை கொடுத்தேனோ, அதை வைத்திருந்தேன்.

நான் எதை செலவழித்தேனோ, அதை வைத்திருந்தேன்.

எதை வைத்திருந்தேனோ, அதை இழந்து விட்டேன்.’

***

82

ஒரு சூரியனை நோக்கி சுடுபவன்,

ஒரு மரத்தை நோக்கி சுடுபவனை விட

உயரமாக சுடுவான்.

***

83

எது அழகாக இருக்கிறதோ,

அது நல்லது. அதே போல

எது நல்லதாக இருக்கிறதோ,

அது மிக விரைவில்

அழகானதாக ஆகி விடும்.

***

84

எந்தவொரு மனிதனும்

அவன் தன் மனதில்

நினைத்துக் கொண்டிருக்கும்

அளவிற்கு எந்த சமயத்திலும்

மிகவும் சந்தோஷமான மனிதனாகவோ,

மிகவும் கவலைகள் நிறைந்த

மனிதனாகவோ இருக்க முடியாது.

***

85

ஒரு பரந்த மனம் எப்போதும்

போவதற்கு தயாராக இருக்கும்.

அதற்கு எந்தவொரு

ஆயத்தமும் தேவையில்லை.

***

86

நல்ல நிலையில் இருக்கும்

நாய்க்கு உதவுவதைவிட,

நொண்டியாக இருக்கும் நாய்க்கு

எப்போதும் உதவுங்கள்.

***

87

மரியாதைக்குரிய இடத்தில்

இருக்கும் மனிதர்களுக்கு

ஒரு சொல் என்பது

ஒரு விலங்கைப் போன்றது.

***

88

அன்பு இல்லாத இடத்தில்

உண்மையான புனிதத்தன்மைக்கு

இடமே இல்லை.

***

89

உண்மைக்கு மிகவும் அருகில்

வரக்கூடிய ஒரு நகைச்சுவை,

ஒரு அடையாளத்தை பின்னால்

விட்டு விட்டே செல்கிறது.

***

90

நாம் எல்லோருமே

பாவச் செயல்கள்

செய்திருப்பவர்கள்தாம்.

தீர்ப்பு கூறுவதில்

அவசரப் படாதீர்கள்.

***


91

எப்படி கற்றுக் கொள்ள வேண்டும்

என்பதை யார் தெரிந்து

வைத்திருக்கிறார்களோ,

அவர்கள் தேவையான அளவிற்கு

தெரிந்து வைத்திருப்பவர்களே.

***

92

ஒரு மனிதன் எப்படி வாழ்கிறானோ,

அதே மாதிரியே இறப்பான்.

ஒரு மரம் எப்படி கீழே விழுகிறதோ,

அப்படித்தான் அது கிடக்கும்.

***

93

உங்களுடைய கடிதங்களையே

திரும்பத் திரும்ப படித்துக்

கொண்டிருக்காதீர்கள்.

***

94

மலை முஹம்மதுவைத் தேடி

வரவில்லையென்றால்,

முஹம்மது கட்டாயம் மலையைத்

தேடிச் செல்ல வேண்டும்.

***

95

ஒரு தியாகியை

உருவாக்குவது மரணமல்ல –

அதற்கான காரணம்தான்.

***

96

குணமாவதில்

பெரும் பங்கு வகிப்பது

குணமாக வேண்டும்

என்ற விருப்பம்தான்.

***

97

கடவுள்களின் அரவை இயந்திரங்கள்

மெதுவாகத்தான் அரைக்கும்.

ஆனால், அவை மிகவும்

சிறப்பாக அரைக்கும்.

***

98

எந்த மனிதனும் ஒரு தவறை

செய்யத்தான் செய்வான்.

ஆனால், ஒரு முட்டாளைத் தவிர

வேறு யாரும் அதிலேயே வாழ்ந்து

கொண்டிருக்க மாட்டார்கள்.

***

99

உன்னால் ஒரு மலையை அளக்க

முடியவில்லையென்றால்,

ஒரு சமவெளியை உன்னால்

பார்க்கவே முடியாது.

***

100

இயற்கை ஒன்றையும்

அறிவு இன்னொன்றையும்

எந்த சமயத்திலும் கூறுவதில்லை.

***


101

மனிதர்களின் செயல்களில்

ஒரு அலை இருக்கிறது.

அந்த அலை, வெள்ளத்தின் மூலம்

அதிர்ஷ்டத்தை நோக்கி செல்லும்.

***

102

கடவுள் அன்பின் வடிவத்தில் இருக்கிறார். 

ஒரு கணவன் மற்றும் மனைவியின் அன்பு

நம்மை உண்மைத் தன்மை

நிறைந்த இதயத்திற்கு அருகிலும்,

அறிவு கடவுளிடமும் வேறு

எந்த அனுபவத்தையும் விட,

கொண்டு செல்கிறது.

***

103

எங்கு எழுத்துக்கள் சுதந்திரமாக

இருக்கின்றனவோ,

ஒவ்வொரு மனிதனும்

எங்கு படிக்க முடிகிறதோ,

அங்கு எல்லாமே நல்ல நிலையில்

இருப்பதாகத்தான் அர்த்தம்.

***

104

மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால்,

நல்ல உடல் நலம் இருக்க வேண்டும்...

மோசமான ஞாபக சக்தி இருக்க வேண்டும்.

***

105

ஒரு செயல் சிறப்பான முறையில்

நடைபெற வேண்டுமென்றால்,

ஒரு நூறு கெட்ட செயல்கள்

மறக்கப்பட வேண்டும்.

***

106

இளம் தோள்களில் வயதான

தலைகளைப் பொருத்துவது

மிகவும் சிரமமான விஷயம்.

***

107

தன்னுடைய நல்ல எதிர்காலத்தைத்

தெரிந்து வைத்திருப்பவன்,

சந்தோஷமானவனாக இருப்பான்.

***

108

எவன் சந்தோஷங்கள் நிறைந்த

இதயத்தைக் கொண்டிருக்கிறானோ,

அவன் தொடர்ந்து விருந்து உண்பதற்கு

நிகரானவனாக இருப்பான்.

***

109

ஒரு பணம் நிறைந்த பர்ஸை விட

ஒரு சந்தோஷம் நிறைந்த

இதயம் மேலானது.

***

110

விருந்தாளிகளை சந்தோஷப்படுத்துவதை

மறந்து விடாதீர்கள். அதன் மூலம்

தங்களுக்கே தெரியாமல் சிலர்,

தேவதைகளை சந்தோஷப்படுத்தி

இருக்கலாம்.

***


111

ஒரு கடனை விட,

அன்பு அதிகமாக

பிணைக்கக் கூடியது.

***

112

ஒரு நல்ல சிரிப்பு ஒரு வீட்டின்

சூரியோதயமாக இருக்கிறது.

***

113

கேள்விகளைக் கேட்பதன் மூலம்

ஒரு மனிதன் நிறைய

கற்றுக் கொள்ள முடியும்.

***

114

கூர்ந்து கவனிப்பதற்கான

அருளை எங்களுக்குத் தா.

***

115

நீ அன்பு செலுத்தப்பட

வேண்டுமென்றால்,

நீ அன்பு நிறைந்தவனாகவும்,

அன்பு செலுத்துபவனாகவும் இரு.

***

116

மேலான நிலையில் இருக்கும்

மனிதன் தேடுவது

அவனுக்குள் இருக்கிறது.

சாதாரண மனிதன் தேடுவது

மற்றவர்களிடம் இருக்கிறது.

***

117

நிமிடங்கள் விஷயத்தில்

மிகவும் கவனமாக இருங்கள்.

மணிகள் தங்களைத் தாங்களே

பார்த்துக் கொள்ளும்.

***

118

எவன் மற்றவர்களுக்கு

தீங்கு செய்ய நினைக்கின்றானோ,

அவன் தனக்குத் தானே

அழிவைத் தேடிக் கொள்கிறான்.

***

119

நினைவுச் சின்னங்கள்

மிக உயர்ந்தவைதாம்.

நம் வாழ்க்கைகள் தகுதி

உடையவையாக இருக்கும் பட்சம்,

நம் நினைவுகளில் அவை இருக்கும்.

***

120

விருந்து வைத்திருக்கும்

வீட்டிற்குச் செல்வதை விட,

துக்க வீட்டிற்குச் செல்வது சிறந்தது.

***


121

நம் நண்பர்கள் இல்லாமல்

நாம் உயிர் வாழ்ந்து விட முடியும்.

ஆனால், பக்கத்து வீட்டுக்காரர்கள்

இல்லாமல் நாம் வாழ முடியாது.

***

122

அமைதிக்குப் பதிலாக போரைத் தேர்ந்தெடுக்கும்

அளவிற்கு யாரும் முட்டாள் அல்ல.

அமைதித் தன்மையின்போது,

மகன்கள் தந்தைகளைப் புதைக்கிறார்கள்.

ஆனால், போரில் தந்தைகள்,

மகன்களைப் புதைக்கிறார்கள்.

***

123

எந்த மனிதன் தான் தீர்மானிப்பதற்கு

முன்பு எதுவுமே தெளிவாக

இருக்க வேண்டும் என்று

கட்டாயம் நினைக்கின்றானோ,

அவன் எந்தச் சமயத்திலும்

தீர்மானிக்கவே மாட்டான்.

வாழ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வருத்தங்களையும் கட்டாயம்

ஏற்றுக் கொள்ள வேண்டும்.

***

124

அதிகமான அளவில்

அதிகமான சந்தோஷத்தை

அளிக்கக் கூடிய செயல் எதுவோ,

அந்த செயல் மிக சிறந்த ஒன்றே.

***

125

ஒரு குருவியின் இளமையை விட

கழுகின் முதுமை உயர்ந்தது.

***

126

பொது அறிவு,  வெளிப்படையான

செயலாற்றும் போக்கு –

இவைதான் மனிதர்களை வியப்படைய

வைக்கும் விஷயங்கள்.

***

127

ஒரு மென்மையான பதில்

கோபத்தை விரட்டியடிக்கிறது.

அதே நேரத்தில் - கடுமையான வார்த்தைகள்

கோபத்தை உண்டாக்கும்.

***

128

எதிர்ப்பார்ப்புடன் திறந்து,

ஆதாயத்துடன் எந்தப்

புத்தகத்தை மூடுகிறோமோ,

அதுதான் ஒரு நல்ல புத்தகம்.

***

129

பகிர்ந்து கொள்வதற்காக

இருப்பதே மகிழ்ச்சி.

***

130

நீ என்ன விரும்புகிறாயோ,

அது உனக்குக் கிடைக்க

வில்லையென்றால்,

எது உனக்கு கிடைத்திருக்கிறதோ,

அதை நீ விரும்ப வேண்டும்.

***


131

முட்டாளின் இதயம் அவனுடைய

வாயில் இருக்கிறது.

ஆனால், புத்திசாலியின் வாய்

அவனுடைய இதயத்தில் இருக்கிறது.

***

132

ப்ளம் மரம் எந்த அளவிற்கு

உயரமாக இருக்கின்றதோ,

அந்த அளவிற்கு ப்ளம்,

நன்கு பழுத்திருக்கும்.

***

133

புலர்காலைப் பொழுதிற்கு

சற்று முன்னால்

இருப்பதுதான் இருட்டு.

***

134

அந்நியான செயல்கள் செய்வதன் மூலம்

உண்டாகும் துன்பத்தை விட, அதை செய்வது-

மிகவும் கேவலமான விஷயமாகும்.

***

135

கடுமையாக உழைக்கும்

ஒரு மனிதனின் தூக்கம்

இனிமையானது.

***

136

பிள்ளைகள் தங்களின் பெற்றோரை

எப்போது சரி செய்கிறார்களோ,

அப்போது சட்டம் சந்தோஷப்படுகிறது.

***

137

பெரும்பாலான கடுமையான

பொய்கள் அமைதியான

சூழ்நிலையில்தான் கூறப்படுகின்றன.

***

138

கடவுளின் பக்கம் எது இருக்கிறதோ,

அதுதான் பெரும் பலம் கொண்டது.

***

139

செயல்களைக் கொண்ட

மனிதனாக இல்லாமல்

வார்த்தைகளைக் கொண்ட

மனிதனாக இருப்பவன்,

களைகளால் நிறைந்திருக்கும்

ஒரு தோட்டத்திற்கு ஒப்பானவன்.

***

140

தனக்கு எஜமானனாக

எவன் இருக்கிறானோ,

அவன் வெகு சீக்கிரமே

மற்றவர்களுக்கு எஜமானனாக

ஆகி விடுவான்.

***


141

காயம் பட்டவர்களுக்கு

மட்டுமே எப்போதும் கெட்ட நேரம்

வந்து சேரும் என்று கூறுவதற்கில்லை.

***

142

எல்லா பொருட்களும்

மண்ணிலிருந்துதான் பிறக்கின்றன.

அனைத்துப் பொருட்களையும்

திரும்பவும் மண்ணே

எடுத்துக் கொள்கிறது.

***

143

கடவுளே கூட

இரண்டு மலைகளை

அவற்றிற்கு நடுவில்

ஒரு பள்ளம் இல்லாமல்

உருவாக்க முடியாது.

***

144

எங்கு இசை இருக்கிறதோ,

அங்கு தவறான

செயல்கள் நடைபெறாது.

***

145

அதிகமான வயது அல்ல –

கூர்மையான பார்வைதான்

அறிவைக் கொண்டு வரும்.

***

146

பிறரிடம் பார்க்கும்

நல்ல விஷயங்களை

நீ விரும்ப ஆரம்பித்தால்,

அவற்றை உன்னிடம்

நீ உண்டாக்கிக் கொள்வாய்.

***

147

உன்னிடம் சில கவிதைத்

தன்மைகளை உண்டாக்காமல்,

உன்னால் எந்த இடத்திலும்

கவிதையைப் பார்க்க முடியாது.

***

148

மிகப் பெரிய மரம்

பலமான காற்றை

தன்னை நோக்கி

வரச் செய்கிறது.

***

149

மனிதர்களிடம் நம்பிக்கை வை.

அவர்கள் உனக்கு

உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள்.

அவர்களை உயர்வாக நடத்து.

அவர்கள் உயர்வானவர்களாக

நடந்து கொள்வார்கள்.

***

150

இடைவெளி அன்பை கூர்மைப்படுத்துகிறது.

இருத்தல் அதிக உறுதியனாதாக ஆக்குகிறது.

***


151

தெய்வீக முரண்பாடுகளின்

ஆச்சரியச் சின்னமே பெண்.

***

152

எறும்பை விட

சிறப்பாக நீதி போதனை செய்ய

யாராலும் முடியாது.

அது எதுவுமே கூறுவதில்லை.

***

153

சோம்பேறித்தனமான மனிதனுக்கு

மிகவும் குறைந்த அளவிலேயே

ஓய்வு கிடைக்கும்.

***

154

இரவு வேளைகளில்

தொடர்ந்து கண்ணீர்

வந்து கொண்டிருக்கலாம்.

ஆனால், காலையில்

சந்தோஷம் வந்து விடும்.

 ***

155

ஏராளமான பேர்

தங்களின் ஞாபக சக்தியைப் பற்றி

குறைப்பட்டுக் கொள்வார்கள்.

ஆனால், மிகச் சிலரே

தங்களின் தீர்மானமெடுக்கும்

சக்தியைப்ப் பற்றி குறைப்படுவார்கள்.

***

156

நல்லது என்பது

ஒரே ஒரு விஷயம்தான்.

அது- அறிவு.

கெட்டது என்பது

ஒரே ஒரு விஷயம்தான்.

அது - அறியாமை.

***

157

தவறே செய்யாமல்

எந்த மனிதன் இருக்கிறானோ,

அவனுக்கு சட்டம் என்பதே

தேவையில்லை.

***

158

ஏமாற்றுவதை விட,

ஏமாற்றப்படுவது

எவ்வளவோ மேலானது.

***

159

பின்னோக்கி பார்த்துத்தான்

வாழ்வைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், அது முன்னோக்கி

வாழப்பட வேண்டும்.

***

160

திறமை வாய்ந்த சோம்பேறிகளின்

எண்ணிக்கையை

இயந்திரங்கள் பெரிய அளவில்

அதிகரித்திருக்கிறது.

***


161

தைரியம் ஒரு மனிதனை

சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும்

அழைத்துக் கொண்டு செல்கிறது.

***

162

உருண்டு கொண்டிருக்கும்

ஒரு கல் தன்னுடன்

எதையுமே சேகரித்துக்

கொண்டு செல்லாது.

***

163

உன் பர்ஸ் முழுக்க

ணத்தை வைத்திருப்பதை விட,

ஏராளமான நூல்களை

படிக்க முயற்சி செய்.

***

164

தேவை என்ற ஒன்று சிறிதளவு

தைரியத்தையாவது தரும்.

***

165

புதியன என்று எதுவுமே இல்லை.

எல்லாமே மறக்கப்பட்டவைதான்.

***

166

சொர்க்கம் மழை பெய்ய வேண்டும்

என்று விரும்பினாலோ,

உன் அன்னை இன்னொரு திருமணம்

செய்து கொள்ள வேண்டும்

என்று ஆசைப் பட்டாளோ,

அதைத் தடுக்க எதனாலும் முடியாது.

***

167

அனைத்து மானிட அறிவையும்

இரண்டே சொற்களில்

அடக்கி விடலாம் :

காத்திருத்தல்,

நம்பிக்கையுடன் இருத்தல்.

***

168

பொன் ஆட்சி செய்யாத காலம் 

எதுவோ, அதுதான்

பொற்கால ஆட்சி.

***

169

செய்யக் கூடாது என்று

நினைக்கும் செயலை,

செய்யாமல் இரு.

உண்மை அல்லஎன்று நினைப்பதை,

கூறாமல் இரு.

***

170

புனிதத் தன்மை இல்லாத இடத்தில்,

சந்தோஷம் இருக்காது.

***


171

எந்த மனிதன் தன்னுடைய

நேர்மைத் தன்மையை இழக்கிறானோ,

அவன் இழப்பதற்கு எதுவுமே இல்லை.

***

172

இதயம்

நெருப்பிற்குள் இருக்கும்போது,

வாய்க்குள்ளிருந்து கொஞ்சம்

நெருப்புப் பொறிகள்

வெளியே வரத்தான் செய்யும்.

***

173

வாழ்வு என்ற ஒன்று

எவ்வளவு நாட்கள் இருக்கிறதோ,

அவ்வளவு நாட்கள்

நம்பிக்கை என்ற ஒன்றும்

இருக்கும்.

***

174

ஒரு ஆரோக்கியமான உடல்,

ஆன்மா தங்கக் கூடிய

விருந்தினரின் மாளிகையாக இருக்கிறது.

நோய் பாதித்த உடல்,

சிறைச் சாலையாக இருக்கிறது.

***

175

ஒவ்வொரு இதயத்திற்கும்

அதற்கென்று இருக்கக் கூடிய

வேதனை இருக்கத்தான்

செய்கிறது.

***

176

மிகவும் உயரமாக

இருக்கும் மரத்திற்குத்தான்

மிகப் பெரிய வீழ்ச்சி இருக்கும்.

***

177

எல்லா திருமண கேக்குகளிலும்,

நம்பிக்கைதான்

இனிப்பு நிறைந்த கனியாக இருக்கிறது.

***

ஒரு சோம்பேறி மனிதன்

சாத்தானின் விளையாட்டு

நண்பனாக இருக்கிறான்.

***

178

அறிவாளி மனிதர்கள்

திட்டங்களுடன் இருப்பார்கள்.

நம்மில் பெரும்பாலோர்

அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்போம்.

***

179

ஒரு நண்பனை இழப்பதை விட,

ஒரு நகைச்சுவையை இழக்கலாம்.

***

180

கருணை என்ற

சூரியயோதயத்தில்தான்,

நல்ல குணங்கள் வளர்கின்றன்.

***


181

வராமல் இருப்பதை விட,

தாமதமாக வந்தது நல்லதுதான்.

ஆனால், எந்தச் சமயத்திலும்

தாமதமாக வராமல் இருப்பது நல்லது.

***

182

உழக் கூடிய கோவேறு கழுதையைப்

பற்றி தெரிந்து கொள்.

நெய்யக் கூடிய புழுவைப் பற்றி

தெரிந்து கொள்.

***

183

அரை உண்மையாக இருப்பது

பெரும்பாலும்

ஒரு பெரிய பொய்யாகத்தான்

இருக்கும்.

***

184

ஒவ்வொரு மனிதனின்

வாழ்க்கையுமே கடவுளின்

விரலால் எழுதப்பட்ட

குழந்தைகள் கதைதான்.

***

185

நெஞ்சில் அன்பு

வைத்திருப்பவன் எவனோ,

அவன் தன் இரண்டு பக்கங்களிலும்

சிறகுகளை வைத்திருக்கிறான்.

***

186

ஆண் வேலை செய்யலாம்,

சிந்திக்கலாம்.

ஆனால், பெண்ணால்தான்

உணர முடியும்.

***

187

நல்ல பெண்கள்

நிறைந்த சமுதாயம்,

நல்ல பழக்க வழக்கங்களுக்கான

அடிப்படையாக இருக்கிறது.

***

188

செயல்படும்போது கசப்பாக இருப்பது,

நினைத்துப் பார்க்கும்போது

இனிப்பானதாக இருக்கலாம்.

***

189

மனங்கள் இல்லாத சரீரங்களை

கடை வீதியில் இருக்கும்

சிலைகளுடன் ஒப்பிடலாம்.

***

190

பணத்தின் மீது

கொண்டிருக்கும் ஈடுபாடுதான்

எல்லா பாவங்களுக்கும்

மூல காரணமாக இருக்கிறது.

***


191

நான் ஏன் ஒரு சிலையை வைத்திருக்கிறேன்

என்று கேட்கும் மனிதர்களை விட,

நான் ஏன் ஒரு சிலையை வைக்காமல் இருக்கிறேன்

என்று கேட்கும் மனிதர்களைத்தான் சந்திக்கிறேன்.

***

192

அவர்களின் தாய் எப்படி உருவாக்குகிறார்களோ,

அப்படி உருவாகுபவர்கள்தான் மனிதர்கள்.

***

193

நீ உன் மீது எந்த அளவிற்கு

அன்பு வைத்திருக்கிறாயோ,

அந்த அளவிற்கு உன் பக்கத்து

வீட்டுக்காரர்களிடமும் அன்பு செலுத்து.

***

194

வாழ்வு மிகவும் சிறியது.

நம்முடன் இருண்ட பயணத்தில்

பயணம் செய்து வருபவர்களின்

இதயங்களில் சந்தோஷங்களை

உண்டாக்க நமக்கு பெரும்பாலும்

நேரமே கிடைப்பதில்லை.

வேகமாக அன்பு செலுத்த ஆரம்பியுங்கள்!

சீக்கிரம் பரிவுடன் இருங்கள்!

***

195

நமக்கு தெரிந்த எல்லா உலகங்களிலும்

எது மிகவும் சிறந்ததாக இருக்கின்றதோ,

அதைத்தான் எல்லோருமே விரும்புகிறார்கள்.

***

196

நம்மைப் பற்றி நல்ல வகையில்

மனிதர்களைப் பேசச் செய்வதற்கான

ஒரே வழி - நல்ல செயல்களைச்

செய்வதுதான்.

***

197

முதலில் உதவி என்று

வந்து நிற்கும்நிலைமை

பின்னர் ஆட்சி செய்வது என்று

மாறி விடும்.

***

198

ஒரு மனிதன் எந்த அளவிற்கு

நல்ல குணங்களுடன் இருக்கிறானோ,

அந்த அளவிற்கு மிகவும் குறைவாகவே

அவன் பிற மனிதர்களை

மோசமானவர்கள் என்று சந்தேகப் படுவான்.

***

199

ஒவ்வொரு அரசனும் அடிமைகளின்

வம்சத்திலிருந்துதான் உருவாகிறான்.

அதேபோல ஒவ்வொரு அடிமையும்

தங்களின் முன்னோர்களிடம்

அரசர்களைக் கொண்டிருக்கிறான்.

***

200

ஒரு மிகச் சிறந்த ஒவியன்

ஒரு மிகச் சிறந்த ஓவியத்தை

மிகவும் சிறிய க்யான்வாஸில்

வரைந்து விடுவான்.

***


201

நீ நண்பனாக ஆக்கப்படும்போது,

அதைப் பற்றி ஞாபகத்தில் வைத்திரு.

நீ நண்பர்களைச் சேர்க்கும்போது,

அதை மறந்து விடு.

***

202

மிகவும் சிறியதற்கும்

மிகவும் பெரியதற்கும்

இடையில் இருக்கும்

ஸ்டேஷனுக்குப் பெயர்தான் -

சந்தோஷம்!

***

203

ஒரு தடவை

பேசுவதற்கு முன்னால்

இரண்டு தடவைகள் கேள்.

***

204

ஒரு வீடு இல்லாத

ஒரு மனிதன்

ஒரு கூடு இல்லாத

பறவையைப் போன்றவன்.

***

205

ஒரு செயல் நம்பிக்கையுடன்

செய்யப்படவில்லையென்றால்,

இதயம் நொறுங்கி விடும்.

***

206

சந்தோஷமற்று இருப்பவர்களிடம்,

நேரம் எவ்வளவு மெதுவாக

நகர்ந்து கொண்டிருக்கிறது!

***

207

தன்னால் அவன்

காயம்பட்டுக் கொள்ளலாமே தவிர,

அவனால் காயம்பட்டவர்கள்

யாரும் இல்லை.

***

208

எந்த இதயம்

பெருந்தன்மை கொண்டதாகவும்

அன்பு மயமானதாகவும் இருக்கிறதோ,

அது பெரும்பாலும் கடவுளை ஒத்தது.

***

209

தாவி குதிப்பதற்கு முன்னால்,

கூர்ந்து பார்.

***

210

ஏதாவது பயனுள்ள

ஒன்றைச் செய்வதற்காக

கிடைக்கும் நேரத்திற்குப்

பெயர்தான் ஓய்வு.

***


211

இன்று என்னை

நன்றாக வாழ விடுங்கள்.

நாளை என்ன என்று

யாருக்குமே தெரியாது.

***

212

மனிதனின்

மிகப் பெரிய எதிரியே

மனிதன்தான்.

***

213

பிறருக்கு எதிராக இருக்கும்

நம் மனங்களைத் துடைத்து,

பிரகாசமாக வைத்துக் கொள்வது

நல்லது.

***

214

தனக்கு நினைவுச் சின்னம் என்ற

ஒன்று தேவையே இல்லை

என்று யார் நினைக்கிறார்களோ,

அவர்கள்தான் அதற்குத் தகுதியானவர்கள்.

***

215

அதிர்ஷ்டமற்ற தன்மையைத்

தாங்கிக் கொள்ளும் சக்தி

யாருக்கு இல்லாமலிருக்கிறதோ,

அவர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை

ஏற்றுக் கொள்வதற்கும்

தகுதி இல்லாதவர்களே.

***

216

எல்லா மனிதர்களிடமும்

மிகவும் சுதந்திரத் தன்மையுடன்

இருக்கக் கூடிய மனம் எதுவோ,

அதுதான் புனிதத் தன்மை

கொண்ட மனம்.

***

217

குழந்தைகள்

இருப்பதால் மட்டுமே,

நல்ல அன்னைமார்கள்

உண்டாகி விட முடியாது.

***

218

ஒரு நோய்வாய்ப்பட்ட

மனிதனுக்கு பொறுமைதான்

மிகச் சிறந்த மருந்து.

***

219

எவன் தன்னுடைய நாட்டை

மிகச் சிறந்த நாடாக

ஆக்க வேண்டும்

என்று முயற்சிக்கின்றானோ,

அவன்தான் தன் நாட்டின் மீது

அதிகமான அன்பு வைத்திருப்பவன்.

***

220

தன்னுடைய கருத்தை

எந்தச் சமயத்திலும்

மாற்றிக் கொள்ளாமல் இருப்பவன்,

தேங்கிக் கிடக்கும் நீருக்கு ஒப்பானவன்.

மனதின் தவளைகள்

அதில் பெருகிக் கொண்டிருக்கும்.

***


 

221

 எந்தவொரு மனிதன்

வீட்டில் விருந்தாளிகளை

வரவேற்காமல் இருக்கிறானோ,

அவன் வெளியே

மிகவும் குறைந்த அளவிலேயே

உபசரிக்கப்பவர்களைச் சந்திப்பான்.

***

222

ஒரு ஆசிரியர்

எல்லையைத் தாண்டி

பாதிப்பை உண்டாக்கிக்

கொண்டிருப்பார்.

தன்னுடைய ஆதிக்கம்

எங்கு நிற்கும் என்று

அவர் எந்தச் சமயத்திலும்

கூற மாட்டார்.

***

223

ஒரு பாதுகாப்பான

இடத்தில் இருந்து கொண்டு

ஒரு மனிதன்

மிகவும் எளிதாக அறிவுரை

கூற முடியும்.

***

224

என் தாத்தா யார்

என்று எனக்குத் தெரியாது.

ஆனால், அவருடைய பேரனாக

வரப் போவது யார்

என்பதைத் தெரிந்து கொள்வதில்

நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

***

225

ஒவ்வொரு வருடமும்

அறுவடை என்ற ஒன்று வந்தாலும்,

அது ஒவ்வொரு நாளும் வராது.

***

226

தானியம் எப்போது

முழு விளைச்சலுக்கு

வந்து விட்டதோ,

அப்போது அறுப்பதற்கான

நேரம் வந்து விட்டது.

***

227

உண்மையான அப்பாவித்தனம்

எதைப் பற்றியும் வெட்கப் படாது.

***

228

தங்களுடைய விஷயங்களை விட

மற்றவர்களின் விஷயங்களில்

மனிதர்கள் மிகச் சிறப்பாக

தீர்ப்பு கூறுகிறார்கள்.

***

229

சிந்தனையே இல்லாமல் கற்பது,

உழைப்பை வீண் செய்வதைப் போன்றது.

கற்காமலே சிந்தித்துக் கொண்டிருப்பது

மிகவும் ஆபத்தானது.

***

230

கடவுள் சொர்க்கத்திலிருந்து

சூரியனை நீக்கி விட்டாலும்,

அப்போதும் நாம் கட்டாயம்

பொறுமையுடன் இருக்க வேண்டும்.

***


231

மனிதர்கள் உறங்கிக்

கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இறக்கும்போது,

கண் விழிக்கிறார்கள்.

***

232

மூடப்பட்டிருக்கும் ஒரு நூல்,

ஒரு மரக் கட்டையைப் போன்றது.

***

233

புரிந்து கொள்ளாமலே

படிப்பதில் என்ன

பிரயோஜனம் இருக்கிறது?

***

234

நீ கடவுளுக்கும்

சாத்தானுக்கும்

சேவை செய்ய முடியாது.

***

235

திருமண வாழ்க்கையை

ஆழமானதாக ஆக்குவதே

அன்புதான்.

***

236

காலை வேளையில் மலைக்கு.

மாலைப் பொழுதில் நீர் ஊற்றுக்கு.

***

237

ஒரு அன்னையை

வாழ்வுடன் பிணைக்கச்

செய்து கொண்டிருப்பவர்களே

பிள்ளைகள்தான்.

***

238

ஒரு பெயரில் என்ன இருக்கிறது?

ஒரு ரோஜாவை

என்ன பெயர் கூறி அழைத்தாலும்,

அது இனிய நறுமணத்தைக்

கொண்டதாகவே இருக்கும்.

***

239

யார் அன்பு செலுத்துகிறார்களோ,

அவர்கள் சொர்க்கத்திலிருந்து

ஒரு எட்டு வைக்கும்

தூரத்தில் இருக்கிறார்கள்.

***

240

நீங்கள் நேராக

நின்று கொண்டிருக்கும் பட்சம்,

உங்களுடைய நிழல்

குறைபாடுகளுடன் இருந்தால்,

நீங்கள் அதற்காக கவலைப்படாதீர்கள்.

***


241

எல்லோரும்

எந்த மனிதனை

இரண்டாவது இடத்திற்குப்

போகும்படி செய்கிறார்களோ,

அவன் சந்தேகமே இல்லாமல்

முதல் இடத்திற்கு

செல்லக் கூடிய தகுதி உடையவனாக

இருக்கிறான்.

***

242

பொன், நெருப்பால்

முயற்சி செய்யப்படுகிறது.

தைரியமான

மனிதர்கள் சண்டையால்

தீர்மானிக்கப்படுகிறார்கள்.

***

243

நீங்கள் ஏழையாக இருந்தால்,

உங்களின் நல்ல குணங்களைக்

கொண்டு நீங்கள் யார் என்பதை

காட்டுங்கள்.

பணக்காரனாக இருந்தால்,

உங்களுடைய நல்ல செயல்களின்

மூலம் யார் என்பதை காட்டுங்கள்.

***

244

ஒரு மென்மையான பதில்,

கோபத்தை இருக்கும்

இடமே தெரியாமல் விரட்டி விடும்.

***

245

உயரமான கட்டிடங்களில்

இருக்கும் மேல் மாடி

பெரும்பாலும் காலியாகத்தான்

இருக்கும்.

***

246

என்னுடைய

கவுரவத்திற்கு

காவலனாக

இருப்பவன் நானே.

***

247

உங்களுடைய வீட்டை

என்றைக்கு நீங்கள் சுத்தம்

செய்யாமல் இருக்கிறீர்களோ,

அன்று எதிர்பாராத விருந்தாளிகள்

வருவார்கள்.

***

248

உண்மையான பிரச்னைகளை

சீர் செய்து விட முடியும்.

கற்பனையான

பிரச்னைகளைத் தான் வெற்றி

கொள்ள முடியாது.

***

249

இரண்டு நண்பர்களுக்கு இடையே

நீதிபதியாக இருப்பவன்,

அவர்களில் ஒருவனை

இழந்து விடுவான்.

***

250

இளமையில் அறிவாக இருப்பது,

வயதான காலத்தில்

அனுபவமாக ஆகிறது.

***


251

நல்ல குணங்கள் இல்லாத அழகு,

வாசனை இல்லாத மலரைப் போன்றது.

***

252

மிகப் பெரிய

ஆடம்பரங்களைத் தேடுவதை விட,

ஒரு நல்ல பெயரைத்

தேடுவது உயர்ந்தது.

***

253

சட்டம் என்பது

வலிமையானவர்களைக்

காப்பாற்றுவதற்கே

இருக்கிறது.

***

254

வாழ்வு என்பது

ஒரு புனிதமான ஜூ­வாலை.

நாம் நமக்குள் இருக்கும்

ஒரு கண்ணுக்குத் தெரியாத

சூரியனைக் கொண்டு

வாழ்கிறோம்.

***

255

நீதிபதிகள் சட்டத்திற்குக்

கீழ்ப்படிய வேண்டும்.

அதே நேரத்தில்

அதை செயல்படுத்தவும்

வேண்டும்.

***

256

இயற்கை சுற்றுகிறது.

அதனால், மனிதகுலம்

முன்னேறுகிறது.

***

257

பிரச்சாரம் செய்யாதே.

ஏனென்றால், நீ ஏதாவது

கூறியாக வேண்டும்.

ஆனால், கூறுவதற்கு

சில விஷயங்கள் இருக்கின்றன.

***

258

ஒரு முட்டாள் பணத்தை

உண்டாக்கலாம்.

ஆனால், அதை எப்படி

செலவு செய்வது என்பதற்கு

ஒரு புத்திசாலி மனிதன்

வேண்டும்.

***

259

உன்னுடைய நம்பிக்கையை

பணத்தின் மீது வைக்காதே.

ஆனால், உன்னுடைய பணத்தை

நம்பிக்கையின் மீது வை.

***

260

எவன் குழந்தையை

கையால் தூக்குகிறானோ,

அவன் தாயை இதயத்தால்

எடுக்கிறான்.

***


261

சாதாரணமாக தோன்றும்

மனிதர்களைத்தான் கடவுள் விரும்புகிறார்.

அவர்களை அதிகமாக

அவர் படைத்திருப்பதற்கு

அதுதான் காரணம்.

***

262

உணர்ச்சிவசப்படுவதிலிருந்து

உன்னை நீ காத்துக் கொள்.

கடவுள் உன்னை பாவத்திலிருந்து

விலகி இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.

***

263

உலகில் ஏராளமான

விமர்சகர்கள் இருக்கிறார்கள்.

ஏனென்றால், பாராட்டுவதை விட,

விமர்சனம் செய்வது என்பது

மிகவும் எளிதானது.

***

264

உண்மையான வாக்குறுதி சிறியதாக இருக்கும்.

ஆனால், செயல்படுவது பெரிதாக இருக்கும்.

பொய்யான வாக்குறுதி மிகப் பெரியதாக இருக்கும்.

செயல்படுவதோ சிறிய அளவில் கூட இருக்காது.

***

265

எங்களை சந்தோஷமானவர்களாகவும்,

நல்லவர்களாகவும் ஆக்கு!

***

266

நல்ல உடல் நலம்,

நல்ல அறிவு -

இவை இரண்டுமே

மிகப் பெரிய கொடுப்பினைகள்.

***

267

சுயநலம் கொண்ட இதயம்

வேதனைப்படுகிறது என்றால்,

அதற்கு அது தகுதியானதே.

***

268

ஒரு புனிதமான செயல்

ஒரு கெட்ட ஆன்மாவை

மறைத்து வைக்காது.

***

269

சந்தோஷத்தைப் பின்பற்றி

கவலையை பயணிக்கச் செய்வது

சொர்க்கத்தின் கட்டளை.

***

270

உலக சந்தோஷங்களில்

யார் குளிக்கிறார்களோ,

அவர்கள் கண்ணீர்

நிறைந்த உலகத்தில் நீந்தித்தான்

ஆக வேண்டும்.

***


271

எந்த இடத்தில் சட்டம் தண்டனை

அளிக்காமல் இருக்கிறதோ,

அந்த இடத்தில்

அது செயல்பட முடியாது.

***

272

யார் வாழ ஆரம்பிக்கிறானோ,

அவன் மரணமடையவும்

ஆரம்பிக்கிறான்.

***

273

நேர்மையான முறையில் வாழ்.

நேர்மையான முறையில்

இறப்பாய்.

***

274

மனிதர்கள் குள்ளநரித்தனத்துடன்

இருப்பதைப் பார்ப்பதில்

ஆச்சரியப்படுவதற்கு

எதுவுமே இல்லை.

அதே நேரத்தில் - அவர்கள் எப்படியெல்லாம்

அவமானப்பட்டு நிற்கிறார்கள்

என்பதைப் பார்க்காமல்

இருக்கிறோமே என்பது

பெரும்பாலும் ஆச்சரியப்படக்

கூடிய விஷயமே.

***

275

நூல்களை படிப்பதை விட,

மனிதர்களைப் படிப்பது

மிகவும் அவசியம்.

***

276

காயத்தை அனுப்பி வைத்த

கடவுள் மருந்தையும்

அனுப்பி வைப்பார்.

***

277

நிறைய பேசி, மனதில் இருக்கும்

எல்லா சந்தேகங்களையும்

இல்லாமற் செய்வதை விட,

அமைதியாக இருந்து கொண்டு

ஒரு முட்டாளைப் போல

நினைத்துக் கொண்டிருப்பது

எவ்வளவோ மேலானது.

***

278

பணத்தின் மீது கொண்ட ஆசையும்,

கற்க வேண்டும் என்பதின் மீது கொண்ட விருப்பமும்

எந்தச் சமயத்திலும் சந்திக்கவே சந்திக்காது.

***

279

சிறிய குழந்தைகளின் உதடுகளிலும்,

இதயத்திலும் அன்னை என்பதுதான்

கடவுளின் பெயர்.

***

280

அன்பு என்பது சிறிய சொல்லாக இருக்கலாம்.

ஆனால், அதில் அனைத்தும் இருக்கின்றன.

***


 

281

அமைதி இல்லாத மனதிற்கு

இசை மருந்தாக இருக்கிறது.

***

282

ஒவ்வொரு மனிதனும்

கேட்கும் விஷயத்தில்

மிகவும் வேகமாக இருக்க வேண்டும்.

பேசும் விஷயத்தில்

மிகவும் மெதுவானவனாக

இருக்க வேண்டும்.

***

283

தாவரங்கள் சூறாவளியை

எதிர்த்து தைரியத்துடன் நிற்கும்போது,

ஓக் மரங்கள் கீழே விழலாம்.

***

284

உன்னை விட

புத்திசாலித்தனமான

அறிவுரையை உனக்கு யாரும்

தர முடியாது.

***

285

ஏராளமான சொத்துக்களை

தன்னிடம் வைத்துக் கொண்டு

அதை அனுபவிக்காமல்

இருக்கும் மனிதன்,

பொன்னை ஏற்றிக் கொண்டு

செல்லும் கழுதை,

செடிகளைச் சாப்பிடுவதைப்

போன்றவன்.

***

286

ஒரு மனிதன் இறக்கும் வரையில்,

அவன் முழுமையாக பிறக்கவில்லை

என்றுதான் அர்த்தம்.

***

287

அமைதியான மனம்தான்

நோயைத் தீர்ப்பதற்கான மருந்து.

***

288

இறந்து போன துறவிகளை பாராட்டுவது,

உயிருடன் இருக்கும் துறவிகளை தூற்றுவது -

இதுதான் உலகத்தின் வழக்கமாக இருக்கிறது.

***

289

எல்லா விஷயங்களுடனும்

அனுசரித்துச் செல்வது -

இதுதான் வாழ்க்கையின்

பொன்னான சட்டம்.

***

290

கடவுள், சாதாரண மனிதர்களுக்கு சிரிப்பை,

கண்ணீர் இல்லாமல் அளிப்பதில்லை.

***


291

உன்னுடைய கடிதங்களையே

எப்போதும் திரும்பத் திரும்ப

டித்துக் கொண்டிருக்காதே.

***

292

யார் எப்போதும் வாழ

ஆரம்பித்துக் கொண்டே

இருக்கிறார்களோ,

அவர்கள் மோசமாகத்தான்

வாழ்வார்கள்.

***

293

எல்லா மாமிசங்களும்

புல்லைப் போன்றவையே.

அங்கிருக்கும் நல்லவை,

வயலில் இருக்கும் மலர்களுக்கு

நிகரானவை.

***

294

மனிதன் பெண்ணுக்குள்ளிருந்து

சில நாட்களிலேயே பிறந்திருக்கலாம்.

ஆனால், அவன் கொடுத்த

தொல்லைகள் அதிகம்.

***

295

உருண்டு கொண்டே இருக்கும்

கல் எப்படி எந்த பாசிகளையும் சேகரிக்காதோ,

அதே போல ஊசலாடும்

இதயம் பாசத்தைச் சேகரிக்காது.

***

296

இடையில் இருக்கும் ஒரு வேலி,

நட்பை பசுமையாக வைத்திருக்கும்.

***

297

பணிப்பெண்கள் கட்டாயம்

மென்மையானவர்களாகவும்,

பணிவு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

கேட்கும் விஷயத்தில் வேகமானவர்களாகவும்,

பேசும் விஷயத்தில் மெதுவானவர்களாகவும்

அவர்கள் இருக்க வேண்டும்.

***

298

அனுசரித்துச் செல்வதில்தான்

உண்மையான சந்தோஷம் இருக்கிறது.

***

299

முதல் காதலில் இருக்கும்

மாயத் தன்மையே நம்முடைய

அறியாமைதான்.

அது எந்தச் சமயத்திலும்

முடிவடைந்து விடும்.

***

300

தங்களுடைய தலைகளை

பழைய இயற்கையின்

டியில் வைத்து தூங்குவதற்கு

நிகராக எந்தவொரு மனிதனும்

அவ்வளவு அமைதியாக

தூங்க முடியாது.

***


301

எந்த இடத்திற்கு

தான் சென்று கொண்டிருக்கிறோம்

என்பதே தெரியாமல்

ஒரு மனிதன் இருக்கும்போது,

எந்த காற்றுமே

சரியான காற்றாக இருக்காது.

***

302

எப்போதும் சாப்பிட்டால்

பலசாலியாக ஆகலாம்

என்பதை எதிர் பார்.

அதேபோல

எப்போதும் படிப்பதன் மூலம்

அறிவாளியாக ஆகலாம்

என்பதையும் எதிர் பார்.

***

303

தன்னுடைய இதயத்தில்

ஒரு புழுவை

வைத்திருக்கக் கூடிய ஆப்பிள்,

மிகவும் அழகானதாகவே இருந்தாலும்,

அதைப் பற்றி சிறப்பித்துக்

கூறுவதற்கு என்ன இருக்கிறது?

***

304

ஒரு பெண்ணின்

காதலை நோக்கிச் செல்லும்

அனைத்துப் பாதைகளிலும்

பரிதாபத்திற்குரியது

நேராக செல்லும் பாதைதான்.

***

305

திருமணம் என்பது

ஒரு லாட்டரியைப் போன்றது.

அதில் ஆண்கள் தங்களின்

சுதந்திரத்தை இழக்கிறார்கள்.

பெண்கள் தங்களின்

சந்தோஷத்தை இழக்கிறார்கள்.

***

306

ஒரு மனிதன் தன் தந்தையையும்,

தாயையும் விட்டு நீங்களாம்.

தொடர்ந்து அவன் தன் மனைவியிடம்

அடைக்கலம் ஆகிறான்.

***

307

கடவுளின் பெருமையை

சொர்க்கங்கள் கூறுகின்றன.

எல்லா செயல்களும்

வனின் கை வேலைகளே.

***

308

உறையில் ஒரு அம்பு இருப்பதை விட,

இரண்டு அம்புகள் இருப்பது நல்லதுதான்.

மூன்று அம்புகள் இருப்பது அதை விட நல்லது.

***

309

உடல் நலம், சந்தோஷம் -

இரண்டும் ஒன்றையொன்று

சார்ந்திருக்கிறது.

***

310

ஒரு சோம்பேறி மனிதன்

மூச்சை விடலாம்.

ஆனால், அவன் வாழவில்லை.

***


311

சந்தோஷம் என்பது

கொண்டாட்டத்திற்கு நிகரானது.

இரண்டு மோசமான நாட்களுக்கு

நடுவில் வரும் ஒரு நல்ல நாள்.

***

312

மிகவும் மென்மையான சட்டங்கள்

எந்தச் சமயத்திலும் மதிக்கப்படுவதில்லை.

மிகவும் கடுமையான சட்டங்கள்

எந்த காலத்திலும்

நிறைவேற்றப்படுவதில்லை.

***

313

அவன் மிகவும் கடுமையான

இதயத்தைக் கொண்டவன்.

அது 'மே' மாதத்தில் காதலிக்காது.

***

314

வானம் நீல நிறத்தில் இல்லை

என்பதை ஞாபகத்தில்

வைத்துக் கொள்.

ஏனென்றால்,

கண் பார்வை இல்லாதவர்கள்

அதை பார்க்க முடியாது.

***

315

அளவுக்கு அதிகமான சோம்பேறித்தனம்

ஒரு மனிதனின் நேரத்தை

முற்றிலும் எடுத்துக் கொள்கிறது.

எந்தவித வேலையையும் விட,

அது அவனை அவனுடைய

முதலாளிக்கு முன்னால் கேவலமாக

நிற்க வைக்கிறது.

***

316

வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தான்.

அது புறப்பட்ட இடத்திற்கே பயணிக்கிறது.

***

317

உண்மையிலேயே

வெளிச்சம் என்பது

மிகவும் இனிமையானது.

கண்களால்

சூரியனைப் பார்ப்பது

என்பது எவ்வளவு அருமையான

ஒரு விஷயம்!

***

318

நாம் கவலையில் இருக்கும்போது,

முன்பு சந்தோஷமாக

இருந்த நாட்களை

அசைபோட்டுப் பார்ப்பதை விட

துயரங்கள் தரக் கூடிய

விஷயம் வேறொன்றில்லை.

***

319

எந்தச் சமயத்திலும்

நாம் சந்தித்திராத

மோசமான சம்பவங்கள்தான்

தாங்கிக் கொள்வதற்கு

மிகவும் கஷ்டமானவையாக

இருக்கும்.

***

320

அன்பான சொற்கள்

நாக்கைக் களைப்படையச்

செய்யாது.

***


321

கிரேக்க கடவுள்களைப் போல,

கலைஞர்கள் ஒருவரோடொருவர்

வெறுமனே வெளிப்படுத்திக்

கொள்கிறார்கள்.

***

322

நாம் யாரை காயப்படுத்தினோமோ,

அவர்களை வெறுக்கிறோம்.

***

323

நீங்கள் கேட்கப்படுவதற்கு முன்னால்,

அறிவுரை கூறவோ உப்பைப் போடவோ

செய்யாதீர்கள்.

***

324

தன்னுடைய மோகங்களை

கவனிப்பதன் மூலம்

அவன் கண்காணிப்பாளராக இருக்கிறான்.

அவற்றிற்கு சேவை செய்வதன் மூலம்,

அவன் பணியாளனாக இருக்கிறான்.

***

325

ஒரு நாள் முழுமையான

உயிர்ப்புடன் இருப்பதற்காக,

ஒரு நாள் முழுமையான

ஓய்வில் இரு.

***

326

மக்கள் எந்த அளவிற்குத்

தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்களோ,

அதைவிட அவர்கள் மீது

அன்பு செலுத்துவதற்குப்

பெயர்தான் கருணை.

***

327

நிறைய பணம் சம்பாதிப்பதை விட,

ஒரு நல்ல பெயரைப் பெறுவது மேலானது.

***

328

எந்த தடைகளும் இல்லாமல்,

அறிவாளிகளின் இதயம் எல்லாவற்றையும்

பிரதிபலிக்க வேண்டும்.

***

329

நட்சத்திரங்களையே

வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்

ஒரு மனிதன்,

சாலையில் உள்ள ஒவ்வொரு

பள்ளத்தின் கருணையையும்

நம்பியிருக்கிறான்.

***

330

சிறிது காலம் தரிசாகக்

கிடப்பது கூட நல்லதுதான்.

***


331

 ஒரு காலத்தில்

நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர்கள்,

அடுத்த காலத்தில் வணங்கப்படும்

துறவிகளாக ஆவார்கள்.

***

332

அமைதியானவர்கள்

ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

அவர்கள் பூமியை ஆட்சி

செய்வார்கள்.

***

333

அமைதியான மனதுடன் இருப்பதே

தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்கான வழி.

நான் எப்போதும் வாழ்வது இல்லை.

ஏனென்றால், என்னுடைய நாட்கள்

தற்பெருமையிலேயே அழிந்து விடுகின்றன.

***

334

மனிதன் ஒரு மிக உயர்ந்த மிருகம்.

சாம்பல்களில் அவன் அழகாக இருக்கிறான்.

கல்லறையில் மிடுக்கானவனாக இருக்கிறான்.

***

335

திருமணத்தின் கனியாக

பெரும்பாலும் காதல் இருக்கிறது.

ஆனால், அதற்கு அதுவே காரணம் அல்ல.

***

336

என்னுடைய

பக்கத்து வீட்டுக்காரரின்

தோட்டத்தில்

ஒரு மைல் தூரம்

நடக்காதவரையில்,

நான் அவரை

விமர்சிக்காமல்

இருக்க வேண்டும்.

***

337

தான் அன்பு செலுத்தப்படுவதை விட,

எவன் எல்லோரிடமும்

எதிர்பார்ப்புடன் இருக்கிறானோ,

அவன் தன்  மீது அதிகமான

அன்பை வைத்திருக்கிறான்.

***

338

அமைதியைப் பரப்பும்

நல்ல செய்தியைக்

கொண்டு வரும்

அவனுடைய கால் பாதங்கள்

மலைகளின் மீது நடக்கும்போது

எவ்வளவு அழகாக இருக்கின்றன!

***

339

ஒரு பவுண்ட்

துக்கத்திற்கு நிகரானது

ஒரு அவுன்ஸ் சந்தோஷம்.

***

340

பாத்திரம் கல்லில் மோதினாலும்,

கல் பாத்திரத்தில் மோதினாலும் -

பாதிப்பு என்னவோ பாத்திரத்திற்குத்தான்.

***


341

தன்னுடைய சக மனிதர்களுக்கு

நல்ல செயல்களைச் செய்யாமல்,

மனிதர்கள் கடவுளை அணுகி

எதையும் பெற முடியாது.

***

342

எந்த அர்த்தமும் இல்லாத இடத்தில்,

கெட்ட பெயரை வாங்காதே.

***

343

நீண்ட காலம் வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்

வாழ்ந்ததென்னவோ -

ஒரு சிறிய கணம்தான்.

***

344

சாதாரண மனிதர்கள்

பொருட்களைப் பற்றி

விவாதிப்பார்கள்.

முட்டாள்கள்

மனிதர்களைப் பற்றி

விவாதிப்பார்கள்.

உயர்ந்த மனிதர்கள்

எண்ணங்களைப் பற்றி

விவாதிப்பார்கள்.

***

345

நான்

ஏழைகளுக்கு

உணவு தரும்போது

அவர்கள் என்னை

ஒரு துறவி என்று கூறுகிறார்கள்.

ஏழைகளுக்கு

ஏன் உணவு இல்லை

என்று நான் கேட்கும்போது

அவர்கள் என்னை

ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறுகிறார்கள்.

***

346

நாம் எல்லோருமே

வாழ்க்கையில்

பல விஷயங்களையும்

தேர்ந்தெடுக்கிறோம்.

ஆனால் -

அவற்றுடன் வாழ்வதுதான்

மிகவும் சிரமமான ஒன்று.

ஆனால்,

அந்த காரியத்தில்

உங்களுக்கு உதவுவதற்கு

யாருமே இருக்க மாட்டார்கள்.

***

347

எந்தவொரு மனிதன்

யாரையுமே நம்பாமல்

இருக்கிறானோ,

அவனை யாருமே

நம்பமாட்டார்கள்.

***

348

வாழ்க்கை என்பது

ஒயினைப் போன்றது.

அதை கொஞ்சமாக சுவைத்தால்

அதனால்

எந்தக் கேடும் இல்லை.

ஆனால்,

புட்டியைக் காலி பண்ண வேண்டும்

என்று நினைத்தால்

ஒரு தலைவலியை நாமே

வரவழைக்கிறோம்

என்று அர்த்தம்.

***

349

தன்னுடைய

மனச்சாட்சியை

முழுமையாக இழந்து விட்டு

ஒரு மனிதன்

முழு உலகத்தையும்

ஆதாயமாக பெற்றாலும்

அதனால் என்ன பயன்?

***

350

இந்த தருணத்தை

நீ

தேர்ந்தெடுக்காமல் இருக்கலாம்.

ஆனால்,

இந்தத் தருணம்

உன்னைத்

தேர்ந்தெடுத்து விட்டது.

***


351

பகல் என்பது

தூங்குவதற்காக இருப்பது.

இரவு என்பது

விழித்திருப்பதற்காகவும்

பிறரை விழிக்கச் செய்வதற்காகவும்

இருப்பது.

***

352

மற்ற நாடுகளைப் பற்றி

ஒவ்வொருவரும்

எந்த அளவிற்கு

தவறான கருத்துக்களைக்

கொண்டிருக்கிறார்கள்

என்பதை

நேரடியாக கண்டு கொள்வதற்காக

இருப்பதுதான்

பயணம்.

***

353

கடந்த காலத்துடன்

எவையெல்லாம் இருந்தனவோ,

அவையெல்லாம்

போய் விட்டன.

மிகச் சிறந்த விஷயங்கள்

இனிமேல்தான்

வர வேண்டும்.

***

354

நான்

நடிப்பதை விரும்புகிறேன்.

அது

வாழ்க்கையை விட

அதிகமான

உண்மைத் தன்மையுடன்

இருக்கிறது.

***

355

பயணம்

ஒரு மனிதனை

மிகவும் அடக்கமானவனாக

ஆக்குகிறது.

அவன்

இந்த அகன்ற உலகத்தில்

எவ்வளவு சிறிய இடத்தை

வகித்துக் கொண்டிருக்கிறான்

என்பதை

அது புரிய வைக்கிறது.

***

356

அழகாக இருப்பவர்கள்

எப்போதும்

நல்லவர்களாக இருப்பார்கள்

என்று கூறுவதற்கில்லை.

ஆனால்-

நல்லவர்கள்

எப்போதும்

அழகானவர்களாகவே இருப்பார்கள்.

***

357

வாழ்க்கை என்பது

ஒரு சொர்க்கம்.

நீ

அதில் தேவதை.

***

358

நான் எந்தச் சமயத்திலும்

வயதானவனாக

இருக்க மாட்டேன்.

என்னைப் பொறுத்த வரையில்

வயதானது என்பது

என்னை விட

பதினைந்து வருடங்கள் அதிகமானது.

***

359

ஒரு மனிதனிடம்

குறிப்பிடத்தக்க அம்சம்

என்பது

அவன் எதை அடைந்திருக்கிறானோ

அதுவல்ல.

எதை அடைய வேண்டும்

என்று நினைக்கிறானோ

அதுதான்.

***

360

உன் வாழ்க்கையில்

உயர்வு, தாழ்வு

எதுவுமே

இல்லையென்றால்

நீ

இறந்து விட்டாய்

என்று அர்த்தம்.

***


361

புட்டியில் அடைக்கப்பட்டிருக்கும்

கவிதை-

அதற்குப் பெயர்தான்

ஒயின்.

***

362

ஒருவரின்

கொள்கைகளின்படி

வாழ்வதை விட

அவற்றுக்காக

சண்டை போட்டுக்

கொண்டிருப்பது

எளிதானது.

***

363

ஒரு மனிதன் தன்னைத் தானே

சுருட்டிக் கொண்டு இருக்கும்போது,

அவன் ஒரு அழகான பொட்டலத்தைப்

போல ஆகி விடுகிறான்.

***

364

ஒரு நல்ல பெயர்

தன் பிரகாசத்தை

இருளில் காட்டிக்

கொண்டிருக்கும்.

***

365

பணிவு என்பது

வெற்றியின் தாயாக இருக்கிறது,

பாதுகாப்பின் மனைவியாக இருக்கிறது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.